நூற்றுக்கணக்கான
சாளரங்களை
தன்னகத்தே
அடைத்து வைத்திருந்தது
அச்சின்ன பொருள்!
சரியென்று
அதிலொற்றை
சாளரத்தை
திறந்துவிட்டேன்
நாயொன்று
'நான் மட்டுமே இந்தியனென்று'
அலறிக்கொண்டிருந்தது!
அச்சாளரத்தை
மூடியவண்ணம்
மற்றொன்றை
திறந்துவிட்டேன்
பயங்கரவாதி பற்றிய
செய்தி, ஆனால்
பெயர் இடம்மாறியிருந்தது
பிடித்தவனை
தேசியவாதியென்றும்
பிடிபட்டவனை
தேசவிரோதியென்றும்!
பிழைபோலும்
என்றெண்ணி
மூன்றாம் சாளரத்தை
திறந்தவேளை
'டக் டக் டக்'கென்று
கதவைத் தட்டும் ஓசை
சாளரமனைத்தையும்
மூடிவிட்டு
கதவைத்திறந்தேன்
கைது செய்ய
பயங்கரவாதிகள்
நின்றிருந்தனர்
இக்கவிதையை
எழுதியதற்காய்!
-சகா..
09/09/2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக