வியாழன், 10 ஜூன், 2021

கடவுளின் சுயசரிதையிலிருத்து!

பெண்களே என்னை
தொட்டுவிடாதீர்
நான் ஆண்களுக்கானவன்
ஆண்களால்
உருபெற்றவன்
தாழ்ந்த சாதிகளே
என்னருகே வந்துவிடாதீர்
நான் உயர்சாதிக்கானவன்
உயர்சாதியால்
உருவாக்கப்பட்டவன்
தமிழ்மொழியே
என்காதில்வந்து நுழைந்துவிடாதே
நான் புரியாமொழிக்கானவன்
அப்புரியாமொழியை
வாழவைப்பவன்
கடவுளின் சுயசரிதையிலிருத்து!!
-சகா..
16/10/2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக