வியாழன், 10 ஜூன், 2021

பண்பற்றான் ஏதுமற்றான்..

பண்பறுக்கும்
பக்குவம்
பாழாய்ப்
போனதற்கு
இந்த கல்வியும்
ஓர் காரணியே!
பண்பு,
வயதையும்
அது கொடுக்கும்
பக்குவத்தையும்
பொறுத்ததென்றால்,
ஊட்டி உருள
ஊட்டி உருள
இனிக்காது
திதிக்காது
ஊட்டி உருள
ரெண்டு கிலோ
அம்பது மட்டுமென
குரல்வளை
கிழிய கத்தும்
தன்முதல்
பொதுத்தேர்வை
அன்றே
எழுதிவந்த-
அந்த
அப்பாவை
இழந்தவனின்
அன்றைய
சேமிப்பிலிருந்து
இருநூறை
வரியென
பிடுங்கும்
மிடுக்கு
மீசைக்காரனின்
பண்பு
எங்கேபோனது?
ஆண்குரலும்
பெண்ணுடலுமான
திருநங்கைகள்
கண்கலங்க
எள்ளிநகையாடும்
நடுவயதென
தன்மரியாதையும்
கேட்டு
வாங்குபவனின்
பண்பு
என்னானது?
கண்மரித்த
முதிர்கிழவி
கூடையில்,
கத்திரிக்காய்
இரண்டை
சலனமின்றி
திருடும்
அவ்விளவயது
ஆணின்
பண்பு
கெட்டதெப்பொழுது?
இதுவன்றோ
பண்பு! -(எனில்)
பொதுத்தேர்வுக்கும்
தகுதிபெறா
ஒரு
சின்னஞ்சிறு
பொடியனொருவன்
கேட்டுக்கொண்டே
செல்கிறான்
வழிநெடுகிலும்
"காய்கறி
விக்கிறவங்கலாம்
எப்பமா
வீட்டுக்குபோயி
சாப்டுவாங்க!"
கெடா பண்பு
எங்கென
தேடியபொழுது
ஒரு
காய்கறி
சந்தையில்!
நீங்கள்
தலைகீழ்நின்று
கீழிருந்து
மேலாய்
இக்கவிதை
படிப்பினும்
மாறுவதாயில்லை
கல்வியும்
அக்கல்வி
கொடுக்கும்
பண்பும்!
- சகா..
01/02/2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக