வியாழன், 10 ஜூன், 2021

ஈகை ஒரு குழந்தையின் பண்பு..

தன்
சின்னஞ்சிறுவயதில்
ஆசையுற்றும்
தனக்கு கிடைக்கா
பொருளொன்றை
பெரியவனானதும்
தன்மகனிற்கு
வாங்கிக்கொடுத்தான்
'எளிமையென
ஒருநாளைய
பொழுதையும்
கடினமென
மறுநாளைய
பொழுதையும்'
கடக்கும் அப்பாவி
அப்பா ஒருவன்!
அப்பொருள்பெற்று
இல்லம் வருகையில்
தன்திரு மேனிகொண்டு
சட்டை கிழிசல்களை
மறைத்தவண்ணம்
மெதுவாய்
'பசிக்குது
ஏதாவது
கொடுங்க'வென
விம்மிய குரலில்
கேட்டவனின்
கண்களில்
தெரிந்த ஏக்கத்தை
அறிந்தான்
பொருள்பெற்ற மகன்!
ஏங்கித்தவித்த
மனமறிந்து
அவ்வேக்கம் போக்க
தன்பொருளீக
முடிவெடுத்தானவன்!
அப்பனுக்கோ
மனமில்லை
அம்மைக்கோ
மனமிருத்தும்
அனுமதியில்லை!
பொருள் கொடுத்த
மகிழ்வைவிட
அப்பொருளீக
முடியவில்லையென
தானும் ஏங்கவே
முளைக்கத்துடித்த
அம்முதல்
மனித விதையும்
தன்னலத்திற்கு
உரமானது!

-சகா..
03/03/2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக