வியாழன், 10 ஜூன், 2021

பொய்..

நீங்கள்
கண்டதுமில்லை
கேட்டதுமில்லை
தீர விசாரித்ததுமில்லை
ஆனால் 'உண்மை' என்கிறீர்கள்!
நான்
'பொய்' என்றுரைத்தால்
கண்டாயா
கேட்டாயா
தீர விசாரித்தாயா என்கிறீர்கள்!
உண்மையில்
உண்மைக்குதான்
கண்கள் வழி
காட்சி தேவை
செவிகள் வழி
செய்தி தேவை
மூளையின் வழி
புரிதல் தேவை!
பொய்யை
பொய்யென்றுரைக்க
உண்மையில்
குறைந்தபட்ச உண்மையேனும்
இல்லாமலிருந்தாலே போதும்!
எனவே பொய்யர்களே, இனியேனும்
நிறுத்துங்கள் உங்கள் பொய்களை!

-சகா..
03/03/2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக