வியாழன், 10 ஜூன், 2021

சொர்க்கம் உணவிலே...



சாயுங்கால
பொழுதிலே
சாமரசி
ஆஞ்சிவந்து
விடியுமுன்னே
கைகுத்தலா
உமிய நல்லா
பொடச்செடுத்து
அரிசிமட்டும்
வந்தபின்னே
கல் நீக்கி
காயவச்சி
அதபின்ன
ஊரவச்சி
மண்பானையில
சமச்செடுத்து,
நாட்டுமாட்டு
பால
சுண்டவச்சி
ஒற ஊத்தி
கெடச்ச
கெட்டிதயிரு
ரெண்டு
கரண்டி
அதிலிட்டு,
அஞ்சு வெரலும்
படும்படியா
மைய பெசஞ்சி,
எலும்பிச்ச
ஊறுகாய
தொட்டுகிட்டே
வாயில போட்டா
சொர்க்கமாவது
நரகமாவது
அது எதுக்கு
செத்தபின்னே -
இந்த வாழ்க்கையே
சொர்க்கந்தான்னு
சொக்கிதானே
நிப்பீக!

-சகா..
17/01/2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக