வியாழன், 10 ஜூன், 2021

செயற்கை சுவாசம்..

தென்றலில்
தலைவாரி
மணல் கொண்டு
ஒப்பனையிட்டு
தன்மலர்களால்
பூச்சூடி அலங்காரமாய்
நிற்கிறது
புங்கை மரங்கள்!!
மகிழுந்தில்
அவ்வியற்கையை
ரசித்தவண்ணம்,
அதற்கு
செயற்கை சுவாசம்
கொடுத்து
சென்றேன்!
-சகா..
14/07/2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக