வியாழன், 10 ஜூன், 2021

பொய்..

நீங்கள்
கண்டதுமில்லை
கேட்டதுமில்லை
தீர விசாரித்ததுமில்லை
ஆனால் 'உண்மை' என்கிறீர்கள்!
நான்
'பொய்' என்றுரைத்தால்
கண்டாயா
கேட்டாயா
தீர விசாரித்தாயா என்கிறீர்கள்!
உண்மையில்
உண்மைக்குதான்
கண்கள் வழி
காட்சி தேவை
செவிகள் வழி
செய்தி தேவை
மூளையின் வழி
புரிதல் தேவை!
பொய்யை
பொய்யென்றுரைக்க
உண்மையில்
குறைந்தபட்ச உண்மையேனும்
இல்லாமலிருந்தாலே போதும்!
எனவே பொய்யர்களே, இனியேனும்
நிறுத்துங்கள் உங்கள் பொய்களை!

-சகா..
03/03/2018

செயற்கை சுவாசம்..

தென்றலில்
தலைவாரி
மணல் கொண்டு
ஒப்பனையிட்டு
தன்மலர்களால்
பூச்சூடி அலங்காரமாய்
நிற்கிறது
புங்கை மரங்கள்!!
மகிழுந்தில்
அவ்வியற்கையை
ரசித்தவண்ணம்,
அதற்கு
செயற்கை சுவாசம்
கொடுத்து
சென்றேன்!
-சகா..
14/07/2018

கடவுள்..

சிலை
கடவுளென
அவதரிப்பதும்
கடவுள்
சிலையென
அவதரிப்பதும்
கடவுள்களின்
கடவுள்
கைகளில்!!

-சகா..
07/09/2018

பயங்கரவாதிகள்..

நூற்றுக்கணக்கான
சாளரங்களை
தன்னகத்தே
அடைத்து வைத்திருந்தது
அச்சின்ன பொருள்!
சரியென்று
அதிலொற்றை
சாளரத்தை
திறந்துவிட்டேன்
நாயொன்று
'நான் மட்டுமே இந்தியனென்று'
அலறிக்கொண்டிருந்தது!
அச்சாளரத்தை
மூடியவண்ணம்
மற்றொன்றை
திறந்துவிட்டேன்
பயங்கரவாதி பற்றிய
செய்தி, ஆனால்
பெயர் இடம்மாறியிருந்தது
பிடித்தவனை
தேசியவாதியென்றும்
பிடிபட்டவனை
தேசவிரோதியென்றும்!
பிழைபோலும்
என்றெண்ணி
மூன்றாம் சாளரத்தை
திறந்தவேளை
'டக் டக் டக்'கென்று
கதவைத் தட்டும் ஓசை
சாளரமனைத்தையும்
மூடிவிட்டு
கதவைத்திறந்தேன்
கைது செய்ய
பயங்கரவாதிகள்
நின்றிருந்தனர்
இக்கவிதையை
எழுதியதற்காய்!

-சகா..
09/09/2018

போராடுவோம்..

பொறுப்புணர்ந்து செயல்படுவோம்
நாம், உயிரின் மதிப்பறிந்து
பொறுமையடைவோம்
வெற்றிபெற போராட்டம்
கைகொடுக்கும்-தீர்வை
வெறியாட்டம் வெற்றிடமாக்கும்
தண்மையடையுங்கள்
தமிழர்களே-தலைநிமிர
அறிவுமட்டுமே வழிவகுக்கும்

-சகா..
15/09/2016
'Forgive others, not bcz they
deserve it, but bcz we deserve it'
-Jonathan Hule.

ரயில் காத்தாடி..

தொடர்வண்டி
காற்றாடிகளுக்கு
எழுதுகோலை
அவ்வளவு எளிதில்
பிடித்துவிடுவதில்லை!
சுற்றச்சொல்லி
தன்மீது எழுதுகிறது
இல்லையேல்
சுற்றாத
தன்னைப்பற்றி
எழுதிவிடுகிறது!

-சகா..
19/09/2018

கடவுளின் சுயசரிதையிலிருத்து!

பெண்களே என்னை
தொட்டுவிடாதீர்
நான் ஆண்களுக்கானவன்
ஆண்களால்
உருபெற்றவன்
தாழ்ந்த சாதிகளே
என்னருகே வந்துவிடாதீர்
நான் உயர்சாதிக்கானவன்
உயர்சாதியால்
உருவாக்கப்பட்டவன்
தமிழ்மொழியே
என்காதில்வந்து நுழைந்துவிடாதே
நான் புரியாமொழிக்கானவன்
அப்புரியாமொழியை
வாழவைப்பவன்
கடவுளின் சுயசரிதையிலிருத்து!!
-சகா..
16/10/2018